Posts

Showing posts from February, 2020
Image
வாசிப்பு அனுபவம் - 52: நூல் : எனக்குரிய இடம் எங்கே? ஆசிரியர் : ச. மாடசாமி வெளியீடு : பாரதி புத்தகாலயம் பக்கங்கள் : 128 விலை : ₹. 100 *"யோசனைகளுக்குப் பஞ்சமில்லை. தினசரி உதித்தபடி இருக்கின்றன. யோசனைகளின் வடிகாலாக பேச்சு இருக்கிறது. ஏமாளிக் காதுகள் கிடைத்து விட்டால் நிற்காத பேச்சு! பேசிப் பேசியே பல யோசனைகளைக் கரைத்தாயிற்று.* *யோசனைகள் பேச்சைத் தாண்டி செயல் வடிவம் பெறுவது என்னைப் பொறுத்தவரை அபூர்வமாக இருக்கிறது."* என்ற அற்புதமான முன்னுரையுடன் ஆரம்பமாகிறது திரு. ச. மாடசாமி அய்யா அவர்களின் இந்த *"எனக்குரிய இடம் எங்கே?"* நூல். பள்ளி மாணவர்களின் சில செய்கைகளால் மனம் நோகும் தருணங்களில் இந்நூலை வாசிக்கும் ஆசிரிய பெருமக்கள் நிச்சயமாய் மாணவர்களின் உள்ளங்களை அறிந்து எளிதாய் வகுப்பினை வழிநடத்துவர் என்பது உறுதி. அள்ள அள்ளக் குறையா அமுத சுரபியாய் இந்நூலில் நாம் கற்றுத் தெளிய ஏராளம் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. *"அட, போய்யா! வகுப்பறை என்ன நீங்க முதல் போட்டு நடத்துற பெட்டிக்கடையா? நீங்க நெனக்கிற படியே அதுவும் இருக்க! நீங்க போற வழியிலேயே மாணவர்களும் கண்ணக் க...

விலங்குப் பண்ணை - வாசிப்பு அனுபவம்

Image
வாசிப்பு அனுபவம் - 51 நூல் : விலங்குப் பண்ணை ஆசிரியர்: ஜார்ஜ் ஆர்வெல் தமிழில் : க.நா.சு. வெளியீடு : நற்றிணை பதிப்பகம் பக்கங்கள் : 128 விலை : ₹ 125 வகை : நாவல் விலங்குகளின் மூலமாக குழந்தைகளுக்கு நீதி நெறி, அறிவுரைக் கதைகள் கூறலாம். அரசியல் பேச முடியுமா? முடியும் என நிரூபிக்கிறது "விலங்குப் பண்ணை". இது இங்கிலாந்தில் உள்ள ஏதோ ஒரு விலங்குப் பண்ணையில் நடக்கும் கதையல்ல. அன்றாடம் நம்மைச் சுற்றி நடக்கும் நாம் அறிந்தும் அறியாமல் கடந்து செல்லும் அரசியலின் கதை. இங்கிலாந்திலுள்ள " பெரிய பண்ணையின்" சொந்தக்காரனான கொடுமைக்காரன் ஜோன்ஸ்க்கு எதிராக அவன் பண்ணையிலுள்ள விலங்குகள் எல்லாம் கிளர்ச்சி செய்து அவனை விரட்டி பண்ணையை முழுக்க தங்களின் - விலங்குகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றன. அதற்குப் பின் அவை எப்படி தங்களைத் தாங்களே ஆட்சி செய்கின்றன. அனைவரும் "சரிநிகர் சமம்"  என்று தொடங்கி வென்ற புரட்சி எப்படி மீண்டும் அதே ஆண்டான் - அடிமை பாதைக்கே இழுத்துச் செல்கிறது என்பதை கதை இயல்பாய் விவரிக்கிறது. மரத்தில் காய் காய்ப்பதற்கும், சூரியனும் நிலவும் உதிப்பதற்கும...

சலூன் - வாசிப்பு அனுபவம் 81

Image
வாசிப்பு அனுபவம் - 81 நூல் : சலூன் ஆசிரியர் : க. வீரபாண்டியன் வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ் பக்கங்கள் : 128 விலை : ₹ 140 வகை : நாவல் "உயிர் போகும் வலியை விடக் கொடியது - திருமணத்திற்கு முன் மயிர் போகும் வலி" இதுபோன்ற நம் தலைமுடி சார்ந்த  பல மீம்களை  தினமும் சமூக வலைதளங்களில் பார்க்கிறோம். மகிழ்வுடனோ, வேதனையுடனோ அவற்றை பகிர்ந்து பகடியும் செய்கிறோம். நம் அன்றாட வாழ்வில் நம்மை அழகுபடுத்திக் கொள்கிறோம் எனில் நம் கவனத்தில் பெரும்பான்மையை நம் தலைமுடிக்கே தருகிறோம் என்பது தவிர்க்க முடியாத உண்மை. ஆனால், எத்தனை பேர் நம் சிறுவயது முதல் நமக்கு முடிதிருத்திய கலைஞர்களை நினைவில் வைத்திருக்கிறோம்? நாம் வசிக்கும் இடத்தில் / ஊரில் இரண்டுக்கும் மேற்பட்ட முடிதிருத்தும் கலைஞர்கள் இருந்தாலும் ஏதோ ஒரு குறிப்பிட்ட நபரைத் தேடித்தானே எப்பொழுதுமே செல்வோம் அவரிடம் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் சரி. ஏன் அவ்வாறு? நம் மனத்திற்கு திருப்தியாய் அவரால் மட்டுமே முடிதிருத்த முடிகிறது என்ற அசைக்க இயலா நம்பிக்கையில் தானே? மேலும் எங்கேனும் வெளியூர் சென்று விட்டாலும் கூட, எத்தனை நாட்கள் ஆனாலும், அதே நபரி...

குட்டி இளவரசன் - வாசிப்பு அனுபவம் 80

Image
வாசிப்பு அனுபவம் - 80 நூல் : குட்டி இளவரசன் ஆசிரியர் : அந்த்வான் து செந்த் எக்சுபெரி (ப்ரெஞ்சு மொழியில்) (தமிழில்) வெ.ஸ்ரீராம், ச.மதனகல்யாணி வெளியீடு : க்ரியா பக்கங்கள் : 118 விலை :₹ 125 வகை : சிறார் நாவல் தப்பு தப்பு. இந்த குட்டி இளவரசன் நூலின் வகை என்னவென்று கூறினேன்? சிறார் நாவல் என்றா கூறினேன்? இல்லை. அதை அழித்து விடுங்கள். இது சிறார்காளுக்காக எழுதப்பட்ட நாவல் தான். ஆனால் சிறார்களுக்கு மட்டுமேயானது அல்ல. பெரிதும் பெரியவர்களுக்கானது தான் இது. அந்தவான் து செந்த் எக்சுபெரி - ஒரு விமானியாக பணியாற்றியவர். அவர் தானே கூறுவது போல் அமைந்த நாவலிது.  தனக்கு ஆறு வயதாக இருந்தபோது தான் படித்த ஒரு கதையைக் கொண்டு பாம்பு யானையை விழுங்குவதைப் போன்று ஒரு படம் வரைகிறார் எக்சுபெரி. ஆனால் அதைக் காணும் பெரியவர்கள் அதனை தொப்பி போல் உள்ளதாகக் கூறி கிண்டல் செய்வதுடன் உனக்கு ஓவியமெல்லாம் வராது வேறு உருப்படியாக ஏதும் செய் என்ற தொனியில் அறிவுரையும் வழங்க அன்றோடு தன் ஓவியம் வரையும் ஆர்வத்திற்கு முழுக்கு போடுகிறார். *"பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓ...

மரணதண்டனை கைதியின் இறுதிநாள் - வாசிப்பு அனுபவம்

Image
வாசிப்பு அனுபவம் : 79 நூல் : மரணதண்டனை கைதியின் இறுதி நாள் ஆசிரியர் : விக்தோர் ஹ்யூகோ வெளியீடு : க்ரியா பக்கங்கள் : 112 விலை : ₹110 வகை : நாவல் (தேவைதானா என்று தெரியாத ஒரு சிறு குறிப்பு: வழக்கமான முறையில் இல்லாமல், ஒரு சிறு மாற்றத்துடன் இந்த என் வாசிப்பு அனுபவத்தை உங்களுடன் பகிர விரும்புகிறேன்) (திருமதி. தி மற்றும் திரு. க ஆகியோருக்கிடையே அவர்கள் வாசித்த புத்தகம் குறித்து நடக்கும் ஒரு சிறு உரையாடல்....) திருமதி. தி : என்ன புக் படிச்சுகிட்டு இருக்கீங்க Mr. க? திரு. க : விக்தோர் ஹ்யூகோவின் "மரண தண்டனைக் கைதியின் இறுதிநாள்" புத்தகம் படிக்கிறேன் Mrs. தி. தி : மரண தண்டனை கைதியா? எப்டியும் மன்னிக்க முடியாத தப்பைத்தான் பண்ணி இருப்பான். அதான் மரணதண்டனை குடுத்து இருப்பாங்க. இதுல அவனுக்கு ஒரு கடைசி நாள் வேற..... இதை வேற ஒரு புக் ஆ போட்டு இருக்கான். நீங்களும் வேலை மெனக்கெட்டு படிச்சுகிட்டு இருக்கீங்க..... க : இந்த புக் ல அப்டி என்ன இருக்கும்னு நீ நெனைக்குற தி.? தி : வேறென்ன இருக்க போகுது? இறுதிநாள் ல நான் நல்லவன் என்ன இப்டி பண்ணீட்டாங்களே, அநியாயமா தண்டிச்சிட்டாங்...

ஆகுளி - வாசிப்பு அனுபவம்

Image
வாசிப்பு அனுபவம் - 78 நூல் : ஆகுளி ஆசிரியர்: கீதா பிரகாஷ் வெளியீடு : அகநி வெளியீடு பக்கங்கள்: 64 விலை : ₹ 70 வகை : கவிதைகள் ஆகுளி - புத்தகத்தின் தலைப்பே சற்று வித்தியாசமாக இருக்கிறதல்லவா? நானும் அதை அறிந்து கொள்ளும் ஆவலில் தான் நூலைத் தேர்ந்தெடுத்தது. ஆகுளி என்பதற்கான அர்த்தம் எதுவும் நூலின் கவிதைகளில் எங்கும் சொல்லப்படவில்லை. ஆனால், கவிதைகள் ஒவ்வொன்றும் ஆகுளியாக முழங்குகின்றன. இன்னும் ஆகுளி என்பதன் அர்த்தம் நான் கூறவில்லையல்லவா? பொறுமையாக வாசித்துக் கொண்டே வாருங்கள் இவ்வாசிப்பு அனுபவத்தின் இறுதியில் அதன் அர்த்தம் கூறுகிறேன். "நாம் படிக்கும் புத்தகம் முஷ்டியால் மண்டையோட்டை இடித்து நம்மை விழிக்க செய்யாத பட்சத்தில் நாம் அதை ஏன் வாசிக்க வேண்டும். நமக்குள் படிந்திருக்கும் பனிப் பாறையை கோடாரியால் பிளப்பதாக ஒரு புத்தகம் இருக்க வேண்டும்." இந்நூலை வாசிக்கையில் பிரான்ஸ் காஃப்காவின் இவ்வரிகள் தான் என் நினைவிற்கு வந்தன. ஒவ்வொரு கவிதை வரியிலும் அத்தனை வீரியம். சில கவிதைகள் நம் மனசாட்சியை உலுக்குகின்றன. சில கண்ணீர் சொரியச் செய்கின்றன. சிலவோ நம் காதலின் வேர் தேடிச் செல்கின்றன. ...

ஒரு சிறிய விடுமுறைக் கால காதல் கதை - வாசிப்பு அனுபவம்

Image
வாசிப்பு அனுபவம் - 77 நூல் : ஒரு சிறிய விடுமுறைக் கால காதல் கதை ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன் வெளியீடு: தேசாந்திரி பதிப்பகம் பக்கங்கள் : 224 விலை : ₹ 200 வகை : நாவல் உங்களின் பள்ளிப் பருவக் காலத்தில் நீங்கள் கோடை விடுமுறைக்கு உறவினர் வீடுகளுக்கு சென்றதுண்டா? நிச்சயம் சென்றிருப்போம். அதுவும் பெரும்பாலும் தாத்தா - பாட்டி வீட்டிற்கோ அல்லது மாமா வீட்டிற்கோ தான் சென்றிருப்போம் அல்லவா? இக்கதையும் அப்படியொரு கோடை விடுமுறையில் தனது தாத்தா வீட்டிற்குச் செல்லும் ஒருவனது கதை தான். கதை, முதலில் கதையின் நாயகனான ராமசுப்ரணியத்தின் 40 வயதில் வழக்கமாய் ஒவ்வொரு ஆண்டும் அவனது தோழியான சில்வியாவுடன் சேர்ந்து கொண்டாடும்  கிறிஸ்துமஸ் பண்டிகையினைக் கொண்டாட இவ்வாண்டும் கர்நாடக மாநிலம்  சித்தாபுரா செல்வதிலிருந்து தொடங்குகிறது. அங்கிருந்து நாவல் ராமசுப்புவின் பார்வையிலேயே பின்னோக்கி விரைந்து, அவனது 8 ஆம் வகுப்பு கோடை விடுமுறையில் தாத்தா வீடிருக்கும் கோவில்படிக்கு வந்தது, சில்வியாவைச் சந்தித்தது அவர்களுக்கிடையேயான நட்பு , அடுத்தடுத்த கோடை விடுமுறைகளில் நட்பு தொடர்ந்தது பின் பிரிவு, மீண்டும் ச...

வித்தியாசம் தான் அழகு - வாசிப்பு அனுபவம்

Image
வாசிப்பு அனுபவம் : 76 நூல் : வித்தியாசம்தான் அழகு ஆசிரியர்: ச. மாடசாமி வெளியீடு : அகரம் அறக்கட்டளை பக்கங்கள்: 96 விலை : ₹ 100 வித்தியாசம் தான் அழகு - ஆம். வித்தியாசம் என்றைக்குமே அழகு தான். காடுபோல் மொத்தமாய் வளர்ந்திருக்கும் மயிர்க்கூட்டத்தின் நடுவில் ஒற்றை வெண்முடி வித்தியாசமான அழகு மட்டுமல்ல அது அனுபவத்தின் சாயமேறிய பேரறிவும் கூட தானே.... செம்மறியாட்டுக் கூட்டமாய் ஒன்றுபோல் சிந்தித்து சொன்னதற்கெல்லாம் ஆமாமென்று தலையாட்டிய கூட்டத்தின் மத்தியில் எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேள்... என்றுரைத்த கைத்தடி பற்றிய தாடிக்கிழவன் வித்தியாசத்தின் அழகு தானே.....! *"வித்தியாசம் தான் அழகு - குழந்தைகளுக்கான கதைகளும், பெரியவர்களுக்கான நீதிகளும்"* என்ற உப தலைப்போடு அய்யா திரு. ச. மாடசாமி அவர்கள் எழுதியுள்ள இந்நூல் அகரம் ஃபவுண்டேஷன் நடத்தும் 'யாதும்' இதழில் வெளியான 20 கட்டுரைகளின் தொகுப்பு நூலாகும். ஒவ்வொரு கட்டுரையிலும் உலக அளவிலான சிறுவர் கதைகள் ஒன்றினைக் கூறி அதிலிருந்து பெரியவர்களுக்கான நீதியினையும் கூறியுள்ளார் பேராசிரியர் ச. மாடசாமி அய்யா அவர்கள். உண்...

இந்த இவள் - வாசிப்பு அனுபவம்

Image
வாசிப்பு அனுபவம் - 75 நூல் : இந்த இவள் ஆசிரியர்: கி.ராஜநாராயணன் வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம் பக்கங்கள்: 199 விலை: ரூ. 175 இவ்வாண்டின் முதல் நாள் வாசிப்பு என் மனதிற்கினிய எஸ்.ரா. அல்லது கி.ரா. அவர்களின் நூல்களிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டுமென்று இருந்தேன்.... அதைப் போன்றே ஆண்டின் முதல் நாள் என் மனைவி அன்பளிப்பாக வழங்கிய கி.ரா. வின் "இந்த இவள்" நூலிலிருந்தே வாசிப்பு பயணம் தொடங்கியுள்ளது.  முதலில், இந்நூலின் சிறப்பினையும், புதுமையையும் கூறுவதுதான் சரியாக இருக்கும். அப்படியென்ன புதுமை என்று தானே கேட்கிறீர்கள்? நூலில் ஒரு பக்கம் ஆசிரியர் தன் கைப்பட எழுதிய நாவலின் கையெழுத்துப் பிரதியும், மறுபக்கம் அதனை தட்டச்சு செய்த பக்கமுமென மாறி மாறி உள்ளது. உண்மையிலேயே இது நாவல் என்பதனையும் தாண்டி ஒரு வரலாற்றுப் பெட்டகமாக ஆவணப்படுத்தப்பட வேண்டிய நூல் என்றே கூறுவேன். இம்முயற்சிக்காகவே நாம் ஆசிரியரையும், நூல் வெளிவர உடன்நின்றோரையும் பாராட்ட வேண்டும். இதிலென்ன சிறப்பென்று கி.ரா.வினைப் பற்றி தெரியாதவர்கள் யோசிக்கலாம். (எனைக் கேட்டால் கி.ரா. வினைப் பற்றி தெரியாமல் இருப்பதே பெரிய கு...

முனியம்ரம் - வாசிப்பு அனுபவம்

Image
வாசிப்பு அனுபவம் : 74 நூல் : முனிய மரம் ஆசிரியர் : பாலா வெளியீடு : புதிய தரிசனம் பதிப்பகம் விலை : ₹ 80 பக்கங்கள் : 80 வகை : கவிதைகள் வாசிக்கும் போதே இதைப் பற்றி நிறைய பேரிடம் பேச வேண்டும், நிறைய நண்பர்களுக்கு இந்நூலினை - இதன் சாராம்சத்தைக் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற எண்ணம் சில நூல்களை வாசிக்கையில் தான் தோன்றும்.... அப்படித் தோன்றக் கூடிய ஒரு நூல் தான் - *"முனியமரம்"* இந்நூலின் தலைப்பும், அதன் மேல் அட்டையுமே ஒரு பயம் கலந்த ஆர்வத்தோடு நூலினை வாங்கத் தூண்டியது.  பொதுவாய், நூலாசிரியர்கள் நூலின் முன்னுரையில் தன்னைச் சார்ந்தோருக்கும், உதவியோருக்கும் நன்றி கூறுவர். இங்கு, திரு. பாலாவும் அதைத்தான் செய்துள்ளார். ஆனால் சற்றே வித்தியாசமாக. .... // *"என் அம்மா மூலம்தான்* *நீ எனக்கு அறிமுகமானாய்...."* ............. ............. *உனக்காய் என்ன செய்தேன்?* *இதோ இந்தக்* *கவிதைகளை வைத்துக்கொள்"//* என்று தமிழுக்கு அர்ப்பணிப்பதோடு அதையே ஒரு இரு பக்க கவிதையாய் தீட்டி நம்மை காந்தப் பரப்பில் சிக்கிய சிறு இரும்பாய் சட்டென நூலுக்குள் இழுத்து விடுகிறார்.... *...

தேவமலர் -வாசிப்பு அனுபவம்

வாசிப்பு அனுபவம் - 73 நூல் : தேவ மலர் ஆசிரியர் : ஸெல்மா லாகர்லெவ் தமிழில் : க.நா.சு. பக்கங்கள் : 48 விலை : பதிப்பகம் : காலச்சுவடு காகிதத்தில் படிக்காமல் முதன் முதலாய் கைபேசி திரையில் வாசித்த புத்தகம்.  பொதுவாகவே, காகிதத்தாள் தவிர்த்து கைபேசியிலோ,மற்ற கணினி போன்ற திரைகளில் படிப்பதிலோ அதீத ஆர்வமோ, ஈடுபாடோ என்றைக்கும் இருந்ததில்லை.  ஆயினும் வேறு வழியின்றியே, வாசிக்காமல் இருப்பதை விடவும் வேறென்ன மனச்சோர்வு இருந்துவிடப் போகிறது என்ற எண்ணத்தில் தான் இன்று "தேவமலர்" குறுநாவலை வாசிக்க ஆரம்பித்தது. மிகச்சிறிய நாவல் தான். ஆயினும், படிக்கவும், பகிரவும் தன்னளவில் நிறைய பாடங்களைக் கொண்டுள்ளது "தேவமலர்". நாவலின் சுருக்கம் இதுதான்... ஒரு பலே திருடன் தன் மனைவியுடனும், ஐந்து குழந்தைகளுடனும் கீயிங்கே என்ற காட்டில் வாழ்ந்து வருகிறான். அக்காட்டின் வழியே வரும் வழிப்போக்கர்களிடம் கொள்ளையடிப்பதே அவனது பிழைப்பு. ஒரு கட்டத்தில் அவன் மீதான திருட்டு பயத்தினால் அக்காட்டு வழியே மக்கள் யாருமே வராத போது அவனது மனைவியும், பிள்ளைகளும் ஊருக்குள் பிச்சையெடுக்க வருகின்றனர். பயங்கரமான தி...

வெக்கை - வாசிப்பு அனுபவம்

Image
வாசிப்பு அனுபவம் - 72 நூல் : வெக்கை ஆசிரியர் : பூமணி வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் பக்கங்கள் : 175 விலை : 125 வகை : நாவல் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நீங்கள் திரும்பத் திரும்ப கேட்டும், பார்த்தும், விமர்சித்தும் மெச்சி ரசித்த ஒரு கதையைத்தான் இப்போது நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன்.  ஏற்கனவே உங்களுக்கு நன்கு தெரிந்த ஒரு கதையை அறிமுகப்படுத்துவது என்பதில் மிகப் பெரிய சிரமம் உண்டு.  ஆயினும் இப்போது அந்த சிரமத்தைத் தான் நான் சிரமேற்கொள்ளப் போகிறேன். சில கதைகளை ஒரு முறை படித்ததும் அல்லது கேட்டதும் மறந்து போவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.  ஆனால் ஒரு சில கதைகள் தான் நாம் ஒரே முறை வாசித்தாலும் நினைவிலிருந்து தப்பாது நின்று கொண்டே இருக்கும்.  அத்தகையதொரு கதைதான் இந்த வெக்கை. கதையின் மையக்கருவென்று பார்க்கப்போனால் பெரிதாக ஒன்றுமில்லை தான். அதாவது "தன் அண்ணனைக் கொலை செய்த ஒருவனை 15 வயதே நிரம்பிய அவனின் தம்பி சிதம்பரம் கொலை செய்கிறான்.  போலீஸிடம் சிக்கக் கூடாது என்பதற்காக அந்த பையனும் அவனது தந்தையும் தலைமறைவாய் திரிகிறார்கள்."  அவ்வளவு தான் கத...

கதவு - வாசிப்பு அனுபவம்

Image
*வாசிப்பு அனுபவம் : 71* நூல் : கதவு ஆசிரியர் : கி.ராஜநாராயணன் வெளியீடு : அன்னம் வெளியீடு பக்கங்கள் : 167 விலை : ₹ 100 வகை : சிறுகதைகள் 1960 களில் பல்வேறு இதழ்களில் வெளியான கதவு, மின்னல், சாவு, நெருப்பு, சிநேகம், மனிதம்...... உள்ளிட்ட  கி.ரா.வின் 13 சிறுகதைகளின் தொகுப்பு நூலே - கதவு. முதல் சிறுகதையான கதவு - இச்சிறுகதை உங்களுக்கு பல்வேறு விதமான பால்யகால நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்து நினைவுக்குக் கொண்டு வரும்.  ஒரு கிராமத்தில் உள்ள ஏழை குடியானவனின் வீட்டு கதவு, அவர்கள் செலுத்தாத வரி பாக்கிக்காக உள்ளூர் தலையாரியால் கொண்டு செல்லப்படும் கதைதான் கதவு. இன்றைக்கு போன்றே அன்றைக்கும் அரசாங்கம் இயலாதவர்களிடம் இருந்தே இருப்பதை பிடுங்கப் பார்க்கிறது என்பதை இக்கதை மூலம் உணரலாம்.  இந்த கதவு கதையில் வரும் லட்சுமியும், சீனிவாசனும் தாங்கள் வீதிகளில் பொறுக்கிய தீப்பெட்டி காகிதங்களை கதவுகளில் எச்சில் மூலமாகவும், சோற்றுப் பருக்கைகள் மூலமாகவும் ஒட்டி மகிழ்ந்து விளையாடுவதை நம் பால்ய காலத்தில் நம்மில் பலரும் நிச்சயம் செய்து விளையாடி இருப்போம். அந்தக் கதவு எடுத்துச் செல்லப்படும் பொழ...

வேள்பாரி - வாசிப்பு அனுபவம்

Image
வாசிப்பு அனுபவம் - 70 நூல்                 : வீரயுக நாயகன் வேள்பாரி ஆசிரியர்         : சு. வெங்கடேசன் வெளியீடு         : விகடன் பிரசுரம் பக்கங்கள்         : 1408 (608+800) விலை                : ரூ. 1350 (இரண்டு பாகங்களும் சேர்த்து) பாரியைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை கூறுங்கள் என்று யாரேனும் உங்களைக் கேட்டால் உங்களது பதில் என்னவாக இருக்கும். முல்லைக்கு தேர் தந்த வள்ளல் என்பதாக தானே? கடந்த வாரம் வரை என்னை யாரேனும் இக்கேள்வியைக் கேட்டு இருந்தால் எனது பதிலும் இதுவாகத்தான் இருந்திருக்கும். அத்தோடு முல்லைக்கு தேர் கொடுத்ததை ஏனோ ஒரு பெரிய வள்ளல் தன்மையாக ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில் தான் இத்தனை நாளும் இருந்தேன். ஆம். வேறு ஒரு காரியத்திற்கு பயன்பட வேண்டிய ஒரு தேரினை அதுவும் சாதாரண ஒரு கொம்பே போதும் என்பதான ஒரு செயலுக்கு இத்தனை பெரிய தேர் கொடுத்தவன் ஒரு மூடனாக தானே இருக்க வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்குள் ஆரம்பம் முதல்… ஆனால் ...

சஞ்சாரம் - வாசிப்பு அனுபவம்

Image
வாசிப்பு அனுபவம்: நூல்: ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன் வெளியீடு: தேசாந்திரி பதிப்பகம் பக்கங்கள்: 360 விலை : ₹340 முதல் பதிப்பு : பிப்ரவரி 2018 சஞ்சாரம் சஞ்சாரம் - கூகுளில் இதன் பொருள் தேடினால் பயணம், உலா என்பதான அர்த்தங்கள் கிடைக்கின்றன. இந்நாவல் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாகக் கருதப்படும் நாதஸ்வரக் கலையைப் பற்றிய - அதன் கலைஞர்கள் பற்றிய - அவர்கள் படும் துயரம், அவர்களின் பெருமையென பல்வேறு தரப்பட்ட தகவல்களை அலுப்பூட்டாமல் பல மனிதர்களின் கதைகளின் வழியே சைக்கிள் காரியரின் பின் அமர்ந்து செல்லுவதைப் போன்ற ஒரு மகிழ்வான பயணத்தைப் போல நமக்கு உணர்த்தி நம்மை உடன் அழைத்துச் செல்கிறார் நாவலாசிரியர். பொதுவாகவே, எஸ்.ரா.வின் எழுத்துகளில் உவமைகளுக்கு பஞ்சமிருக்காது. அவ்வகையில் இந்நாவலின் முதல் பக்கத்திலேயே அவர் காட்டும் உவமை நம்மை சிலிர்க்க வைக்கிறது. அடுப்பு எரிவதை நாம் தினமும் பார்க்கிறோம் தான். ஆனால், பெரிதும் அதைப் பற்றி ஏதும் சிந்திப்பதில்லை. அதற்கு இவர் கூறும் உவமையைக் கொஞ்சம் கேளுங்களேன். "கல் அடுப்பில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு பால்குடிக்கும் குட்டி ஆடு போல பாத்திரத்தை முட...