மதில்கள் - வாசிப்பு அனுபவம் 95
வாசிப்பு அனுபவம் - 95 நூல் : மதில்கள் ஆசிரியர் : வைக்கம் முகம்மது பஷீர் வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் பக்கங்கள் : 71 விலை : ரூ. 90 பொதுவாகவே வைக்கம் முகம்மது பஷீரின் எழுத்துக்களை வாசிப்பதென்பது வெல்லப் பானைக்குள் கைவிடுவதைப் போன்றது. வெல்லத்தில் கை தொட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகும் கை இனிப்பதை போன்றே, பஷீரின் எழுத்துக்களை வாசித்த பிறகும் நிரந்தரமாய் ஒரு மகிழ்ச்சி உள்ளத்தில் தங்கிவிடும். மலையாள புனைவிலக்கிய உலகில் தனிப்பெரும் சுல்தானாக திகழ்ந்தவர் வைக்கம் முகம்மது பஷீர். அவர் எழுதிய ஒரு மகத்தான காதல் சித்திரம்தான் *"மதில்கள்"* இதை காதல் காவியம் என்று கூறுவதா; வரலாற்றின் அடிப்படையில் புனையப்பட்ட நாவல் என்பதா; அல்லது ஒரு சிறைவாசியின் சிறையனுபவம் என்று எடுத்துக் கொள்வதா? எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும் அனைத்திற்கும் இந்த நாவல் பொருத்தமானதாகவே இருக்கிறது. ஒரு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு அரசியல் கைதியாய் சிறைக்கு வரும் பஷீர் அங்கு நடக்கும்...