Posts

Showing posts from July, 2020

அரியநாச்சி - வாசிப்பு அனுபவம் 111

Image
வாசிப்பு அனுபவம் - 111 நூல் : அரியநாச்சி ஆசிரியர் : வேல ராமமூர்த்தி வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ் பக்கங்கள் : 120 விலை : ₹ 150 வகை : நாவல் *"சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்* *ஏமப் புணையைச் சுடும்"* என்பது வள்ளுவரின் வாக்கு. அதாவது, ஒருவனது கோபமானது அவனை மட்டுமன்றி அவனைச் சார்ந்தவர்களையும் அழித்துவிடும் என்பது இதன் பொருள்.  இக்குறளின் மையப்பொருளை விளக்கும் வகையில் அமைந்த நாவலென்றே கூட இந்நாவலைக் கூறலாம்.  நூலாசிரியரின் வார்த்தைகளிலேயே கூறுவதானால், *"கோபம், குலத்தை அழித்தக் கதை - அரியநாச்சி"* கோபத்தில் ஒரு கொலை செய்துவிட்டு ஆயுள் தண்டனைக் கைதியாய் இருக்கும் வெள்ளையத்தேவரை சந்திக்க நிறைசூலியான மகள் அரியநாச்சி வருவதில் தொடங்குகிறது கதை. வெள்ளையத்தேவரின் மூத்த மகள் அரியநாச்சி, அடுத்த மகன் பாண்டி, இளையவள் மாயழகி.  மாயழகியைத் தன் கணவனின் தம்பிக்கு மணமுடிக்க நினைக்கிறாள் அரியநாச்சி. ஆனால் தன் தம்பிக்கு கட்டிவைக்க எண்ணுகிறாள் பாண்டியின் மனைவி குமராயி. மாயழகி யாரை விரும்புகிறாளோ அவருக்கு கட்டி வைக்க வேண்டியதுதானே என்று நமக்கு தோன்றலாம். ஆனால் இன்றைக்கும் பல இடங்கள...

வேலைக்காரி - வாசிப்பு அனுபவம் 110

Image
வாசிப்பு அனுபவம் - 110 நூல் : வேலைக்காரி ஆசிரியர் : அறிஞர் அண்ணா வெளியீடு : முல்லை நிலையம் பக்கங்கள் : 96 விலை : ₹ 25 வகை : நாடகம்           பேரறிஞர் அண்ணா அவர்களால் எழுதப்பட்ட புகழ்பெற்ற நாடகம் *"வேலைக்காரி."* இது 1949 இல் ஏ.எஸ்.சாமி இயக்கத்தில், அறிஞர் அண்ணா திரைக்கதை, உரையாடலை எழுத திரைப்படமாகவும் வெளிவந்தது.            பெரும் பணக்காரனும், ஊரிலுள்ளோருக்கு வட்டிக்குப் பணம் கொடுத்து வஞ்சகமாய் அவர்களின் சொத்தை அபகரிப்பவனுமான வேதாச்சல முதலியாரின் மகள் சரசா, மகன் மூர்த்தி.  வேதாச்சல முதலியாரிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமையால் அவரின் தண்டனைக்குப் பயந்து தூக்கு மாட்டி இறக்கிறார் சுந்தரம் பிள்ளை.            நீண்ட வருடங்களுக்குப் பிறகு  தந்தையைக் காண வரும் ஆனந்தன் தன் தந்தை தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறான். தன் தந்தையின் மரணத்திற்கு வேதாச்சலம் தான் காரணம் என்பதையறிந்து அவனை கொன்று பழிதீர்க்கக் கிளம்புகையில் அவனுடைய நண்பன் மணியால் தடுத்து நிறுத்தப்பட்டு வேதாச்சலத்தை...

பெண்கதை எனும் பெருங்கதை - வாசிப்பு அனுபவம் 109

Image
வாசிப்பு அனுபவம் - 109 நூல் : பெண்கதை எனும் பெருங்கதை ஆசிரியர் : கி.ராஜநாராயணன் வெளியீடு : அன்னம் பதிப்பகம் பக்கங்கள் : 93 விலை : ₹ 90           பெண்களின் உலகமே தனியானது. தனித்துவமானதும் கூட. ஆண்களால் ஒருபோதும் அதனை முழுமையாக புரிந்துகொள்ளவே முடியாது. அவர்களின் உலகில் அவர்கள் தான் மகாராணி. அவர்களுக்கென்று தனி சட்டதிட்டங்கள். யோசித்துப் பாருங்களேன். மிகப் பெரும் தீங்கிழைக்கும் ஆண்களுக்குக் கூட அவர்களின் நீதிமன்றத்தில் மன்னிப்புண்டு. அவர்கள் தங்களின் அன்பான எதிரிகளின் மீது பிரயோகிக்கும் அதிகப்படியான வலுமிக்க ஆயுதம் மெளனம் மட்டுமே.                       மனித இனம் தோன்றிய நாள் முதலாய் பெண்ணே இனக்குழுவின் தலைவியாய் இருந்தாள். காலப்போக்கில் உடல்வலுவின் காரணமாய் பெண்ணை ஆண் அடக்கியாளத் தொடங்கினான். ஆயினும் இன்றைக்கு வரை மனவலிமையைப் பொறுத்தவரை பெண்தான் முதலிடம் பெறுகிறாள்.                       இரண்டு பெண்கள் பேசிக்கொள்வதிலிருந்து இந்நூல் தொடங்குகிறது. ...

நான் நாத்திகன் ஏன்? - வாசிப்பு அனுபவம் 108

Image
வாசிப்பு அனுபவம் - 108 நூல் : நான் நாத்திகன் - ஏன்? ஆசிரியர் : பகத்சிங் தமிழில் : ப. ஜீவானந்தம் வெளியீடு : பாரதி புத்தகாலயம் பக்கங்கள் : 24 விலை : ₹ 5           ஒரு குழந்தை பிறந்தது முதலே கடவுள் நம்பிக்கை என்பது இயல்பாய் அதன் செல்களில் பதிந்திருக்குமா? வாய்ப்பில்லை தானே? கடவுள் குறித்த கற்பிதங்கள் எல்லாமே மனிதர்களுக்குள் வலிந்து திணிக்கப்படுபவை தான். பலர் வாழ்க்கை முழுவதுமே அவ்வாறு திணிக்கப்படும் கற்பிதங்கள் அத்தனையும் உண்மை என நம்பி அதிலேயே வாழ்ந்து முடித்தும் விடுவர்.  ஆனால், சிலர் மாத்திரமே குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பின் அவ்வித கற்பனைக் கதைகளை ஆராய்ந்து அவற்றில் கிஞ்சித்தும் பகுத்தறிவுக்கு ஏற்புடையவை ஏதுமில்லை என்பதை உணர்ந்து திருந்துவர்.            பகத்சிங் - இந்திய சுதந்திரத்தினைக் குறித்து வாசிக்கையில் தவிர்க்க இயலாத ஒரு பெயர் பகத்சிங். 24 வயதிற்குள் ஓர் இளைஞனால் தன் நாட்டின் விடுதலைக்கு அளப்பரிய பங்களிப்பினை அளிக்கவியலும் என உலகிற்கு உணர்த்திய ஒப்பற்ற போராளி. தேச நலனும், நாட்டு மக்களின் முன்னேற்றமுமே தம் உயிர் மூச்சா...

கன்னித்தீவு - வாசிப்பு அனுபவம் 107

Image
வாசிப்பு அனுபவம் - 107 நூல் : கன்னித்தீவு ஆசிரியர் : சி. சரவண கார்த்திகேயன் வெளியீடு : உயிர்மை பதிப்பகம் பக்கங்கள் : 270 விலை : ₹ 280 வகை : நாவல்           ஒரு நாவல் - ஒரே நாவல் - ஒரே நாவலில் இவ்வளவு விசயங்களை - பல்வேறு தரப்பட்ட தகவல்களை வாசிக்கும் வாசகனுக்கு சலிப்பின்றி கதையினூடே கூறி நாவலை சுவாரஸ்யமாக நகர்த்த இயலுமா? முடியுமென்று நிரூபிக்கிறது எழுத்தாளர் சரவண கார்த்திகேயனின் *"கன்னித்தீவு"* நாவல்.                       சமகால அரசியல், வரலாறு, புவியியல், சூழலியல், பொதுவுடைமை, நாத்திகம், ஆன்மீகம், மனிதம், காதல், கலவி என அத்தனையும் ஒருங்கே நாவலின் வழியே தொட்டுச் சென்றுள்ளார் நூலாசிரியர்.                       நாவலின் கதையைக் கூறலாமா? வேண்டாமா?🤔🤔 வேண்டாம். அதுதான் நீங்களே வாங்கி வாசிக்கப் போகிறீர்களே அப்புறம் எதற்கு நான் வேறு கூறி உங்களின் இனிமையான அனுபவத்தைக் கெடுக்க வேண்டும்?                   ...

திமிங்கல வேட்டை - வாசிப்பு அனுபவம் 106

Image
வாசிப்பு அனுபவம் - 106 நூல் : திமிங்கில வேட்டை (MOBY DICK) ஆசிரியர் : ஹெர்மன் மெல்வின் (தமிழில்) : ஜெகாதா வெளியீடு : சாருபிரபா பப்ளிகேஷன்ஸ் பக்கங்கள் : 96 விலை : ₹ 50           "உலகின் தலைசிறந்த பத்து நாவல்களுள் ஒன்று" என இந்நூலின் அட்டைப்படம் குறிப்பிடுகிறது. நாவலை வாசிக்கையில் அது உண்மைதான் என்பதை நம்மால் உணர இயல்கிறது.            பெக்வோடு கப்பலின் கேப்டனான எனாப் தன் ஒரு காலை இழக்க காரணமான மொபிடிக் என்னும் வெள்ளைத் திமிங்கலத்தை வேட்டையாடிக் கொல்வதற்காக மேற்கொள்ளும் கடற்பயணமே "திமிங்கல வேட்டை (மொபிடிக்)" என்னும் இந்நாவல்.                       எனாப் தான் இக்கதையின் நாயகன் என்றாலும் நாவல் எனாப்பின் வாயிலாக சொல்லப்படவில்லை. இஷ்மேல் எனும் மற்றொரு கப்பல் பயணம் விரும்பும் - அதுவும் திமிங்கல வேட்டைக்குச் செல்ல விரும்பும் ஒருவனின் வாயிலாகவே சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவேளை எனாபே கதை சொல்வதாக இருந்தால் தனது வீர சாகச பிரதாபங்களையே முன்னிருத்தி பேசுவதாக நாவல் அமைந்து விடுமோவென்று ஹெர்...