Posts

Showing posts from March, 2020

கானகக்கன்னி - வாசிப்பு அனுபவம் 87

Image
வாசிப்பு அனுபவம் - 87 நூல் : கானகக் கன்னி ஆசிரியர் : கல்வி கோபாலகிருஷ்ணன் வெளியீடு : சாகித்ய அகாதெமி பக்கங்கள் : 78 விலை : ₹ 45 பல்வேறு மொழிகளிலும் சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற சிறந்த  நூல்களை அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடும் நிறுவனமான சாகித்ய அகாதெமி பதிப்பகம் நூல்கள் எப்பொழுதும் குறைந்த விலையில் கிடைக்குமென்பதால் ஒவ்வொரு புத்தக திருவிழாவிலும் சாகித்ய அகாதெமி ஸ்டாலில் இருந்து சில பல நூல்களை அள்ளி வருவதுண்டு. அப்படி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 10 ரூபாய் விலையில் வாங்கி வந்த நூல் தான் *"கானகக் கன்னி"* நூலின் தலைப்பைப் பார்த்தவுடன் இது ஏதோ மாயாஜால நூல் என்ற எண்ணத்தில் தான் நான் வாங்கியது. ஆனால் இன்று வாசிக்கையில் தான் தெரிந்தது இது நமக்குள் இயற்கை மீதான அன்பை, பற்றுதலை பன்மடங்கு மெருகேற்றச் செய்யும் மந்திரஜால நூல் தானென்று. இனி கதைக்கு வருவோம்.... காட்டில் ஒரு பெரிய மரத்தை நோக்கி விறகு வெட்டி ஒருவர் கோடரியை வேகமாய் வீசும் போது, "அய்யோ..... அம்மா.....?" என்ற குரல் கேட்டு திடுக்கிறார். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு யாருமில்லை என்று தெரிந்தவுடன் இது...

பேசும் தாடி - வாசிப்பு அனுபவம் 86

Image
வாசிப்பு அனுபவம் - 86 நூல் : பேசும் தாடி ஆசிரியர் : உதய சங்கர் வெளியீடு :வானம் பதிப்பகம் பக்கங்கள் : 104 விலை : ₹ 80 வகை : சிறார் நாவல் சிறு வயதிலிருந்தே மீசையின் மீதும், தாடியின் மீதும் மிகுந்த ஆர்வமுண்டு எனக்கு. ஆயினும் தலையிலோ அல்லது தாடையிலோ சற்று அதிகப்படியாய் முடி இருந்து விட்டாலும் வீட்டில் விளக்குமாறுகள் தாறுமாறாய் பறக்குமென்பதால் தாடி இன்று வரை வைத்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாமலே இருந்து வருகிறது எனக்கு. அதனால் தானோ என்னவோ பெரிதாய் தாடி வைத்திருப்பதும் பெரியாரை எனக்கு பிடிப்பதற்கும் தனியொரு காரணமாய் அமைந்திருக்குமோ என நான் எண்ணுவதுண்டு. நூலின் பெயரைப் பார்த்தவுடனே இத்தகு எண்ணமெல்லாம் உள்ளுக்குள் சுழன்றதாலேயே தான் இப்புத்தகத்தை வாங்கியது. சரி... நம்ம கதையெல்லாம் இங்கு எதற்கு.....? நூலின் கதைக்கு வருவோம் ... ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் பேரப்பிள்ளைகளான சுகானாவையும், சூர்யாவையும் பார்ப்பதற்காக தாங்கள் தங்கியுள்ள கருமலை எனும் மலையடிவார கிராமத்திலிருந்து தாத்தாவும் ஆச்சியும் வருவர். ஒவ்வொரு முறை வரும்போதும் ஒரே ஓயாத விளையாட்டு தான் சுகானாவிற்கும் சூர்யாவிற்கும். இதில்...

புறாக்களை எனக்கு பிடிப்பதில்லை - வாசிப்பு அனுபவம் 85

Image
வாசிப்பு அனுபவம் - 85 நூல் : புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை ஆசிரியர் : லாவண்யா சுந்தரராஜன் வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் பக்கங்கள் : 127 விலை : ₹ 150 எதார்த்தமாய் அன்றாட வாழ்வில் நடப்பவற்றையே வார்த்தைகளில் வசீகரமேற்றி வாசிக்கத் தூண்டும் சிறுகதைகளாய் தந்திருக்கிறார் நூலாசிரியர் லாவண்யா சுந்தரராஜன். சில்லறை, முற்றத்து அணில், பயணங்கள்.... உள்ளிட்ட ஆசிரியரின் வெவ்வேறு இதழ்களில் வெளிவந்த 11 சிறுகதைகளின் தொகுப்பு நூலாக வெளிவந்திருக்கிறது *"புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை"* என்ற இந்த நூல். கடைசி சிறுகதையான, செண்பா சித்தியைத் தவிர மற்ற 10 கதைகளும் பெண்கள் தாங்களே சொல்வது போல அமைந்துள்ளது. செண்பா சித்தி கதையிலும் கூட ஆண் கதையைக் கூறுவது போல இருப்பினும் அதுவும் முழுக்க ஒரு பெண்ணினைச் சுற்றிய கதையே. சின்ன லட்சுமி சிறுகதையில் வரும் வேலாம்பா, தான் மிகப் பிரியமாய் நேசித்து வளர்த்த வாழைமரத்தின் குலையினை திருட்டுத்தனமாய் யாரோ பறித்துச் சென்றுவிட மகவு இழந்த தாயாய் துடிக்கிறாள். அக்கதையில் வேலாம்பா வாழை மீது கொண்டிருக்கும் பாசத்தைப் பார்க்கையில் என் வீட்டிலும் என் அம்மா பார...

உச்சி முகர் - வாசிப்பு அனுபவம் 84

Image
வாசிப்பு அனுபவம் - 84 நூல் : உச்சி முகர் ஆசிரியர் : விழியன் ஓவியம் : ப்ரவீன் துளசி வெளியீடு : Books for children பக்கங்கள் : 64 விலை : ரூ. 45 உங்களுக்கு குழந்தைகளைப் பிடிக்குமா? இதென்ன மடத்தனமான கேள்வி.... குழந்தைகளைப் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா? அதுவும் சரிதான். சரி..... அப்படியாயின் கேள்வியைச் சற்றே திருத்தி இவ்வாறு கேட்போம். நீங்கள் என்றைக்கேனும் குழந்தைகள் பேசுவதை ரசித்திருத்தீர்களா? அவர்கள் கேட்கும் அத்தனை வினாக்களுக்கும் சலிக்காமல் விடையளித்து இருக்கிறீர்களா? நாமே பல நேரங்களில் பொது இடங்களில் பார்க்க நேர்வதுண்டு. குழந்தைகள் தங்கள் அப்பாவிடமோ அல்லது அம்மாவிடமோ தாங்கள் அறிந்து கொள்வதற்காக தொடர்ந்து ஏதேனும் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அதற்கு பெற்றோர்களின் மறுமொழி, "இப்போ நீ வாயை மூடப் போறியா இல்லையா?" என்பதாகத் தான் பெரும்பாலும் இருக்கும். ஆனால், இந்நூல் இதற்கு முற்றிலும் வேறானது. ஒரு தந்தை தன் நான்கு வயது மகள் கேட்கும் வினாக்களுக்கு விடையளிப்பது, அவளின் குறும்புத்தனங்களை தானும் குழந்தையாய் மாறி ரசித்து அக்குறும்பினில் தன்னையும் கரை...

வாசிப்பு அனுபவம் -83 உறுபசி

Image
வாசிப்பு அனுபவம் - 83 நூல் : உறுபசி ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன் வெளியீடு : தேசாந்திரி பக்கங்கள் : 156 விலை : ₹ 175 யாருடைய மரணமாவது உங்களை அதிகம் பாதித்துள்ளதா? என்றைக்காவது நமக்கும் இதுபோல் மரணம் வருமோவென நீங்கள் அஞ்சியதுண்டா? உங்களது மரணத்தின் பின் உங்களைப் பற்றி யாராவது பேசவோ யோசிக்கவோவாவது செய்வார்களா என நீங்கள் சிந்தித்ததுண்டா? உறுபசி - தமிழ் இலக்கியம் படித்த சம்பத், அழகர், ராமதுரை, மாரியப்பன் ஆகிய 4 நண்பர்களின் கதையிது. சம்பத் இறந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு மற்ற மூவரும் எங்கே செல்வதன்றே அறியாது கானல் காட்டிற்கு செல்வதிலிருந்து நாவல் தன் பயணத்தைத் தொடங்குகிறது. சம்பத் இறந்துவிட்டானேத் தவிர, நாவல் முழுக்கவே நாயகன் அவன் தான். நண்பர்கள் மற்ற மூவரும் சம்பத்துடனான தங்கள் நினைவுகளை நினைவுபடுத்திப் பார்ப்பதில்தான் நாவல் முழுக்கவும் நகர்கிறது. அதேபோல் நாவலில் ஒரு புதுமை - நாவல் அனைவரின் பார்வையிலும் நகர்கிறது. முதலில் அழகரின் பார்வையில் நகரும் நாவல் பின்னர் ஒவ்வொருவரின் விவரிப்பிலும் விரிந்து இடையிடையே இவர்கள் யாருமற்று நாவலாசிரியரின் பார்வையிலும் சில நேரம் பயணிக்கிறது....

வாசிப்பு அனுபவம் 82 - பொன்னியின் செல்வன்

Image
வாசிப்பு அனுபவம் - 82 நூல் : பொன்னியின் செல்வன் ஆசிரியர் : கல்கி வெளியீடு : சிவகுரு பதிப்பகம் பக்கங்கள் : 2351 (5 பாகங்களும் சேர்த்து) விலை : ₹ 700 பல கோடி கரங்களில் பட்ட பின்னும் ஒரு ரூபாய்த்தாள் எவ்வித அழுக்குமின்றி அச்சிட்ட அந்நாளிலிருந்த அதே பளபளப்புடன் இருக்க இயலுமா? நாடு, நகரம் நடுநடுவே பல நச்சுக் கழிவுகள் வெளியேற்றும் ஆலைகள் பலவற்றைக் கடந்தபின்னும் ஒரு நதி வானிலிருந்து வெளிவந்த அதே கோளத்துளியின் ஒழுங்கோடு மாசு மருவின்றி தூய நீராய் கடல் அடைய இயலுமா? ஆம். இயலும். இதோ லட்சக்கணக்கான வாசகர்கள் வாசித்தப் பின்னும் மாய்ந்து மாய்ந்து அதைப் பற்றி பேசிய பின்னும், பலவாறு எழுதிய பின்னும் இன்றும் ஒரு நூல் நூற்றுக்கணக்கில் - ஆயிரக்கணக்கில் புத்தக கண்காட்சிகளில் விற்பனையாகிக் கொண்டும் பலரால் படிக்கப்பட்டு, பாராட்டப்பட்டுக் கொண்டும் தன்னொளியில் குன்றாமல் இருக்கின்றதென்றால் அது நிச்சயம் கல்கியின் *"பொன்னியின் செல்வன்"* மட்டுமே. இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சி முடிந்தபின் இந்து தமிழ்திசை நாளிதழ் அதிகம் விற்பனையான முதல் 10 நூல்களின் பட்டியலை வெளியிட்டு அதில் கீழே குறி...