Posts

Showing posts from November, 2020

121 - அப்பா பிள்ளை அம்மா பிள்ளை - கி.ரா.

Image
  வாசிப்பு அனுபவம் - 121 நூல் : அப்பா பிள்ளை அம்மா பிள்ளை ஆசிரியர் : கி. ராஜநாராயணன் வெளியீடு : அன்னம் பதிப்பகம் பக்கங்கள் : 141 விலை : ரூ. 65 மலர்களிலிருந்து தேனினை உண்ட வண்டு அந்த மதுவின் மயக்கத்திலேயே நாள் முழுவதும் கிறங்கி கிடப்பதற்கு சமானம் கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் கி.ரா. அவர்களின் எழுத்துகளை வாசிப்பது. வாசிக்கையிலும் வாசித்து முடித்த பின்னும் நம்மை ஒரு வித மாய போதைக்குள்ளே சிக்கி மீண்டு வர இயலாது அதைப் பற்றிய சிந்தனையோடே அடுத்து வரும் பொழுதுகளை கழிக்க வைக்க கி.ரா. அவர்களால் மட்டுமே முடியுமென்ற வார்த்தைகளில் எள்முனையளவும் மிகையில்லை. 1970-80 களில் பல்வேறு இதழ்களில் கி.ரா. எழுதிய 15 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இதில் முதல் சிறுகதை ”வால்நட்சத்திரம்”.  பெண் பிள்ளைகளின் உடலியல் ரீதியான வளர்ச்சியை - நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிறுமி என்ற பருவத்திலிருந்து பெரிய மனுசியாய் அவர்கள் கண்ணிமைக்கும் நேரமாய் தோன்றக் கூடும் பொழுதினில் மாறக் கூடிய மாயத்தினை இச்சிறுகதையில் கூறியிருப்பார். அவர்களின் வளர்ச்சியை அவர் இயற்கையோடு ஒப்பிடும் ஒவ்வொரு இடமும் நம்மை சிலிர்...

120 - விசாரணைக் கமிஷன் - சா.கந்தசாமி

Image
  வாசிப்பு அனுபவம் - 120 நூல் : விசாரணைக் கமிஷன் ஆசிரியர் : சா. கந்தசாமி வெளியீடு : கவிதா வெளியீடு பக்கங்கள் : 320 விலை : ரூ. 150 1998 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல் சா.கந்தசாமியின் விசாரணைக் கமிஷன் என்ற இந்நூல். 1940 இல் மயிலாடுதுறையில் பிறந்த இவர் 2020 சூலை  31 -இல் இறந்தார். தங்கராசு - ருக்குமணி என்ற கணவன் மனைவியின் வாழ்க்கையே விசாரணைக் கமிஷன் நாவலின் கதைக்களம். தங்கராசு யாருடைய வம்பு தும்புக்கும் போகாத தான் உண்டு தன் வேலையுண்டு என வாழும் போக்குவரத்துத் துறை ஊழியர் - நடத்துனர். ருக்குமணி - பள்ளிக்கூட ஆசிரியை. கதை 1970-80 களில் நடப்பதுபோல் அமைந்துள்ளது. கதையில் பெரிய அளவிலான திருப்பங்களோ, திடுக்கிடல்களோ ஏதுமில்லை. ஆயினும், கதைமாந்தர்களுக்கிடையிலான உரையாடல்களின் வாயிலாக நாவலினை சலிப்பூட்டாமல் நகர்த்திச் செல்கிறார். மனிதர்களின் மன இயல்புகளையும், தேவை கருதியே நட்பு பாராட்டும் உறவுகளையும், ஆபத்திற்கு உதவும் தோழமைகளையும் அடையாளம் காட்டுகிறார். நாவலின் மையப்புள்ளியாக தங்கராசு-ருக்குமணிக்கு அடுத்தபடியாக அக்கால அரசியலும் இடம்பெறுகிறது. மும்மொழிக் கொ...

119 - பள்ளம் - வாசிப்பு அனுபவம்

Image
  வாசிப்பு அனுபவம் - 119 நூல் : பள்ளம் ஆசிரியர் : சுந்தர ராமசாமி வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம் பக்கங்கள் : 79 விலை : ரூ. 100 சுந்தர ராமசாமி அவர்களின் ஆறு சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து சிறுகதைகளும் 1970-80 களில் வெளிவந்தவை. கதைகளுக்கு காலம் ஒரு எல்லைக்கோடா என்ன? இப்போதும் நம் சமகாலத்திற்கும் பொருந்துவனவாய் அமைந்துள்ள தொகுப்பினை கொண்ட நூலென்று இதனைக் கூறலாம். முதல் சிறுகதையான, *”ரத்னாபாயின் ஆங்கிலம்”* - தன் கௌரவத்தினை மேம்படுத்திக் காண்பிப்பதற்காக தன் தோழியிடம் தான் பகட்டாய் வாழ்வதாய் காட்டிக் கொள்ளும் ரத்னாபாய் அதனாலேயே பொருளாதார ரீதியாய் எவ்வளவு சிரமப்பட நேரிடுகிறது என்பதனை படம் பிடித்துக் காட்டுகிறது. இன்றைக்கும் நம்மில் பலரும் இப்படித்தான் - பகட்டான வாழ்வு வாழ்வதாய் அடுத்தவர்களிடம் காட்டிக் கொள்வதற்காக தேவையற்ற - அத்தியாவசியமற்ற பொருட்களையெல்லாம் வீட்டில் குவித்து வைத்து அதனால் படும் அவஸ்தைகளை அனுதினமும் நேரில் கண்டும் அனுபவித்தும் தான் வருகிறோம் அல்லவா? இச்சிறுகதை தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்த சிறுகதை என்றால் அது நிச்சயம் இரண்ட...