மடவளி - வாசிப்பு அனுபவம் 98
வாசிப்பு அனுபவம் - 98 நூல் : மடவளி ஆசிரியர் : கவிப்பித்தன் வெளியீடு : நூல் வனம் பக்கங்கள் : 335 விலை : ரூ. 320 வகை : நாவல் 1. நண்பர்களையும் விரோதியாக்கும் வல்லமை படைத்தது எது? 2. தாயாய், பிள்ளையாய் பழகிய பங் காளிகளையும் பகையாளிகளாய் மாற்றும் சக்தி படைத்தது எது? 3. நேற்று வரை தோள் மீது கைப்போட்டு பேசி பழகியோரையும், எதிரில் முகம் பார்த்தும் சிரிக்காமல் விலகிச் செல்ல வைப்பது எது? 4. குடிசை வீட்டு குடிமக்களையும் கோபுர உச்சிக்குச் சென்றதாய் மயக்கி - மிதப்பில் இருக்க வைத்து மறுநொடியே குப்பைமேட்டில் விழச் செய்யும் வியூகம் வகுக்கத் தெரிந்தது எது? 5. கூழுக்கில்லாதோரையும் வளையோசை கொஞ்சும் குமரிப்பெண்ணின் களிப்போடு சட்டைப் பை நிறைய காசோடு திரியச் செய்யும் சூத்திரம் எது? இந்த எல்லாக் கேள்விகளுக்கும் பதில் ஒன்று தான்..... என்னவென்று ஊகிக்க முடிகிறதா உங்களால்....??? ஆம்...... இவையெல்லாவற்றிற்கும் ஒரே பதில்....... *"தேர்தல்"* அதுவும் குறிப்பாய் *"உள்ளாட்சித் தேர்தல்"* மீண்டுமொரு முறை கேள்விகளை வாசித்துப் பாருங்கள். உண்மை தானே? கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நாமே ந...