Posts

Showing posts from August, 2020

113 - நீங்கள் ஜெயிக்கப் பிறந்தவர்கள்

Image
 வாசிப்பு அனுபவம் - 113 நூல் : நீங்கள் ஜெயிக்கப் பிறந்தவர்கள் ஆசிரியர் : குன்றில் குமார் வெளியீடு : நக்கீரன் வெளியீடு பக்கங்கள் : 104 விலை : ரூ. 65 நான் எனது கல்லூரிக் காலங்களில் முதன்முறையாக புத்தகம் வாசிக்க வேண்டுமென்ற ஆர்வம் தொடங்கிய காலகட்டங்களில் நூலகத்தில் இருந்து எடுத்து வந்தும், காசு கொடுத்து வாங்கியும் அதிகம் வாசித்தவை தன்னம்பிக்கை சார்ந்த நூல்களே. ஏனோ அச்சமயத்தில் இருந்த குடும்ப சூழ்நிலையா அல்லது இயல்பாகவே அந்த பருவத்தினருக்கு இத்தகைய தன்னம்பிக்கை, சுயமுன்னேற்ற பாதையின் மீதுதான் ஈர்ப்பு ஏற்படுமோ என்னவோ அதிகம் தேடித் தேடி என்னை வாசிக்க வைத்தவை மனதிற்கு ஒரு வகையான தெம்பினை அளிக்கக் கூடிய சுயமுன்னேற்ற நூல்களே.  ஆனால், வாசிப்பு கூட கூட இத்தகைய தன்னம்பிக்கை சார்ந்த நூல்களின் பக்கமிருந்த மனம் விலகத் தொடங்கிவிட்டது. ஒருவேளை ஏறக்குறைய எல்லா நூல்களும் ஒரே மாதிரியான குரலில் சில அறிஞர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகள் அவற்றிலிருந்து அவர்கள் மீண்டு எழுந்து வந்தது என அதே பழைய கள்ளையே புதிய மொந்தையில் ஊற்றிக் கொண்டிருந்தது காரணமாக இருக்கலாம். மிக நீண்ட இடைவெளிக்குப் பின் வா...

வாசிப்பு அனுபவம் 112 - நம் நதிகள்

Image
 வாசிப்பு அனுபவம் - 112 நூல் : நம் நதிகள்  ஆசிரியர் : லீலா மஜும்தார் தமிழாக்கம் : எஸ். கந்தசாமி வெளியீடு : நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா பக்கங்கள் : 64 விலை : ₹ 14            பொதுவாக நதிகளை எதனுடனேனும் ஒப்பிட வேண்டுமாயின் நிச்சயமாய் அவற்றினை நம் தாயுடன் ஒப்பிடலாம். நமக்கு பிறப்பினைத் தந்து இப்பூவுலகைக் காட்டி நம்மை மகிழ்வித்து வளர்ப்பவள் நம் தாய். இப்பண்புகள் அத்தனையையும் ஒருங்கே தன்னகத்தே கொண்டவை நதிகள். உலகம் போற்றும் பல நாகரிகங்கள் நதிக்கரையில் தோன்றி வளர்ந்து செழித்தவை தானே? இயற்கையின் அருட்கொடையான நதிகள் சூழலியல் சமநிலையினை பேணிக்காப்பதில் பெரும் பங்காற்றுகின்றன என்றால் அது மிகையல்ல.                         அப்படிப்பட்ட நதிகளை - அவை உருவாகும் விதம், அவற்றால் செம்மையுறும் நிலப்பகுதிகள், நதிக்கரையோர மக்களின் வாழ்க்கை நிலையென இந்திய நதிகளின் புராதனப் பெருமைகளைப் பேசும் நூல் - நம் நதிகள்.                         நாமெல்ல...