125-பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்
வாசிப்பு அனுபவம் - 125 நூல் : பிள்ளையாருக்குப் பின்னே மர்மம் ஆசிரியர் : சத்யஜித்ரே வெளியீடு : Books for Children பக்கங்கள் : 120 விலை : ரூ. 80 சத்யஜித்ரே - TNPSC தேர்வுகளுக்காக படித்துக் கொண்டிருந்த தருணத்தில் பொது அறிவு பகுதியில் கேட்கப்படும் வினாக்களுக்காக படித்த பெயர் இது. அவருடைய முதல் திரைப்படமான பதேர் பாஞ்சாலி பல விருதுகளைப் பெற்றது என்ற வகையில் தான் சத்யஜித்ரே என்ற பெயரைத் தெரியும். ஆனால், ”பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்” என்ற இந்நூலின் முன்னுரையை வாசிக்கையில் தான், அவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்ல, ஓவியர், எழுத்தாளர், மிகச் சிறந்த துப்பறியும் நாவல்கள் எழுதுவதில் வித்தகர் என்பதையெல்லாம் அறிய முடிந்தது. பொதுவாகவே சத்யஜித்ரே-வின் துப்பறியும் கதைகளின் நாயகன் - ஃபெலுடா. ஆனால், நாவல் முழுவதும் ஃபெலுடாவின் ஒன்றுவிட்ட சகோதரனான தபேஷ் சொல்வது போல தான் எழுதியிருப்பார். இந்நாவலும் ஃபெலுடாவின் துப்பறியும் நாவல் வகையைச் சார்ந்தது தான். ஃபெலுடா , தபேஷ் மற்றும் துப்பறியும் நாவல் எழுதுபவரான ஜடாயு என்கிற லால்மோகன் பாபு மூவரும் துர்கா பூஜையைக் காண்பதற்காக வாரணாசிக